Tuesday, October 6, 2015

தமிழ் முத்துகள் 06.10.2015

KSMuthukrishnan, Ipoh
[10/6/2015, 5:01 PM] +60 12-976 7462: பெரிம் நிகழ்ச்சி..

[10/6/2015, 5:01 PM] +60 12-976 7462: பெருன் நிகழ்ச்சி...
[10/6/2015, 5:02 PM] +60 12-976 7462: மன்னிக்கவும்

[10/6/2015, 5:02 PM] +60 12-976 7462: பெரும் நிகழ்ச்சி

[10/6/2015, 5:22 PM] Aarivan: Perim = பெரிம் அல்லவா?

[10/6/2015, 5:40 PM] Palaniammal Gopeng: Kinta Kelas தோட்டத்தில்  பழங்கால சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இங்கே மாலை வேளையில் மீனா கீரை பறிக்கச் சென்ற  இத்தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பெண் கூறியதாக அச்சிலையை தோண்டியெடுத்தவர் கூறினார். அந்த படங்கள் கீழே. 👇5:42 



[10/6/2015, 5:42 PM] Gunasegaran Melaka: ஆஹா ஆமாம் பெரிம் என்ற இயக்கம். திருத்திக் கொண்டேன். மன்னிக்கவும். 


[10/6/2015, 6:35 PM] KSMuthukrishnan, Ipoh: கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.                                **********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...

[10/6/2015, 6:42 PM] Dr Muni: Males also drink fermented stuff.

[10/6/2015, 7:08 PM] KSMuthukrishnan, Ipoh: அப்படியா... நீங்கள் சொல்லித் தான் எனக்கும் தெரிகிறது... அதாவது மனித ஆண்களைப் போல அவையும் குடி மயக்கத்தில் இருக்குமா...

[10/6/2015, 7:29 PM]  KSMuthukrishnan, Ipohடாக்டர் முனி, நீங்கள் சம்மதம் தெரிவித்தால்... தாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாமே...

[10/6/2015, 8:00 PM]
Palaniammal Gopeng: Kinta Kelas தோட்டத்தில்  பழங்கால சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இங்கே மாலை வேளையில் மீனா கீரை பறிக்கச் சென்ற  இத்தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பெண் கூறியதாக அச்சிலையை தோண்டியெடுத்தவர் கூறினார். அந்த படங்கள் கீழே. 👇



[10/6/2015, 8:19 PM] Jeeva KL: உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை1:40


[10/6/2015, 8:32 PM] Palaniammal Gopeng: 🙏"வந்து பாா் வாட்ஸ்அப்"
 வந்தது பார்…!?🙏


(கவிஞா் வைரமுத்து குரலில் படிக்கவும்)

உன் கட்டை விரல்களின் அா்த்தம் விளங்கும்...👍

உன்னைச் சுற்றி எப்போதும் நோடிபிகேஷன் 💡 சத்தம் ஒலிக்கும் 📢

ராத்திரியின் 🌜 நீளம், அகலம் விளங்கும்😜

உனக்கும் கவிதை 📝 வரும்😂

கண்ணுக்கடியில் 👀 கருவளையம் கட்டாயம் வரும்…😳

குரூப்பில் சேர்த்துவிடுபவன் முதலில் தெய்வமாகவும், நாட்கள் செல்ல செல்ல கோமாளியாகவும் தொிவான்...👹

செல்ஃபி 📱 போட்டே நண்பன் கொல்வான்…💀👽💀👽🙈

பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பான்🐗🐖

போனில் சார்ஜ் மற்றும் பேலன்ஸ் நிக்காது அடிக்கடி உட்காரும்...🔋💰

அட்மின் அடிக்கடி கசாப்பு கடை ஆடாகி குரூப்பினாிடம் சிக்கி சின்னா பின்னாமாவான் 👻🙆🏃

😅 😂😭😰😡😤😆😃
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் 🔫

நம்மை கலாய்க்கும்போது மட்டும் எங்கிருந்து தான் எல்லாம் ஆன்லைனில் வருவாா்கள் என விளங்காது...😭😳😤

சிங்கிள் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி
 சிக்கித் தவிப்பாய் ✔


3G சிக்னல் தெய்வமாய் தெரியும்💤💤💨🙏

📶 ஓசி Wi-Fi மேல் ஆசை பிறக்கும்😁😁😁

போன் அடிக்கடி Hang ஆகி கடுப்பேற்றும்…☎📞🔇📱

History டெலிட் என்பது சிலருக்கு மகிழ்ச்சியைத்தரும்...😜😝

Profile Photoவையையும், ஸ்டேட்டஸ்ஸையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும்😨😰😓

இருக்கும் எல்லா குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் செய்து வெறுப்பேற்ற தோன்றும் 😜😎😈

எப்போதும் தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள்
குரூப்பில் மட்டுமே வந்து
கும்மி அடிப்பார்கள்👬👬👬👏👏👏

தனியாய் சிரிப்பதே பழகிபோகும் 😂😂😂

நோில் பாா்க்கும் போது சிங்கிள் டீ கூட வாங்கித்தராத நண்பன் குரூப்பில் மட்டும் கொடை வள்ளல் போன்று வலம் வருவான, தெய்வம் போல தாிசனம் தருவான்...😂😝🏃

அனுப்பும் மெஸ்ஸேஜூக்கும் எதாா்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது...😡😡😡

குரூப்புக்கு ஒரு உத்தமன் எப்போதும் அட்வைஸ் மட்டுமே செய்வான்…👳☝✔💯

துரோகி கூட தியாக உருவாக காட்சி தருவான் (அடுத்தவா்களுக்கு)

நல்ல நல்ல மெஸ்ஸேஜ் வரும் எவனும் அதை மதிக்கக்கூட மாட்டான். ஆனால், மொக்கையான, கேவலமான மெஸ்ஸேஜூக்கு ரெஸ்பான்ஸ் அள்ளும்...😷😷😷

இரண்டு வாரங்கள் கூட ரெஸ்பான்ஸ் இல்லாவிட்டாலும், திடீரென்று
500 Unread மெசேஸ்ஜ்கள்
வந்து பயமுறுத்தும்…😱😈😡

உன் குடும்பத்தில் இருந்து கொண்டே அனைவருக்கும் அந்நியமாவாய்...💣

TV
💰💵💶பணத்தையும், 👻சுயநலத்தையும் பொிதாய் பேணி வாழும் இந்த கலியுகத்தில், மனிதன் மனிதனாக இருப்பதற்கும், கருத்துக்களை பகிா்ந்து,  இளைப்பாறுவதற்குமான ஒரு சிறிய பிளாட்பாா்ம் அன்றி வேறொன்றுமில்லை...

"வந்து பாா் வாட்ஸ்அப் வந்து பாா்" 🙈🙉🙊😃😂😝😜1:37



[10/6/2015, 8:32 PM] Jeeva KL: மாற்றம் தான் மனிதனின் முன்னேற்றம்


 

[10/6/2015, 8:56 PM] Arul Arumugam: வணக்கம், ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற ஏற்பாட்டில் 18.01.2016 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கிய உரையும், சிறுகதை நூல் அறிமுக விழா

[10/6/2015, 8:56 PM] Arul Arumugam: தமிழ் உங்களை அழைக்கின்றது. அருள்

[10/6/2015, 9:08 PM] Gunasegaran Melaka: நன்று, நன்றி அருள்.

[10/6/2015, 9:09 PM] Gunasegaran Melaka: தமிழகத்திலிருந்து கிடைத்த வசனக்கவிதை.

[10/6/2015, 9:09 PM] Gunasegaran Melaka: எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

 மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே
 

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்  எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்  எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள்எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்  எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்  சுமந்த காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது  சுட்டிக்காட்டும் பெரியவர்கள்  எங்கே?

தோளிலும் இடுப்பிலும்  சுமந்த  பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?

தாய்பாலைத் தரமாய்  கொடுத்த தாய்மை  எங்கே ?

மங்கலங்கள் தந்த  மஞ்சள் பை  எங்கே ?

மாராப்பு சேலை  அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய  சுருக்கு பணப்பையும் எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்  எங்கே ?

சுத்தமான நீரும்  எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்  எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு  ஆயுள் நமக்கு  எங்கே?

இதற்கு பாமரனாலும்,மெத்த படித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு  நேரம் தான் எங்கே? எங்கே




[10/6/2015, 9:14 PM] KSMuthukrishnan, Ipoh: ஐயா குணா, நம்முடைய குழுமத்தில் நல்ல நல்ல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவை நிலையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்

[10/6/2015, 9:15 PM] KSMuthukrishnan, Ipoh: ஆக, ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் இத்தகவல்களையும் உரையாடல்களையும்

[10/6/2015, 9:16 PM] KSMuthukrishnan, Ipoh: நிரந்தரமாகப் பதிவு செய்யலாம் என்று நினைக்கறேன்

[10/6/2015, 9:17 PM] KSMuthukrishnan, Ipoh: இங்கே ஒருவர் இந்த வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிப்பு செய்வது, வலைப்பூவிலும் பதிவாகும்

[10/6/2015, 9:20 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. (66/652)

  திரு சாலமன் பாப்பையா: 
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

  திரு மு.கருணாநிதி: 
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

  Anonymous: 
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).0:170:151:36

[10/6/2015, 9:20 PM] KSMuthukrishnan, Ipoh: ஒரே நேரத்தில் பதிவாகும். வாட்ஸ் அப் ஊடகத்தில் மீள்பார்வை செய்வது சிரமம்.  கணினித் திறமைகள் நம்மிடம் உள்ளன. உங்கள் கருத்து என்ன?

[10/6/2015, 9:22 PM] KSMuthukrishnan, Ipoh: குழும உறுப்பினர்களின் கருத்துகள்...

[10/6/2015, 9:49 PM] Gunasegaran Melaka: மிகச் சிறப்பான ஆலோசனை முத்து அண்ணா. அப்படியே செய்யுங்கள்.

[10/6/2015, 9:51 PM] Saktidasan: 👍👍

No comments:

Post a Comment